tamilnadu

img

கார் பந்தயம் : ஒரே குடும்பத்தை சார்ந்த மூன்று பேர் பலி

ராஜஸ்தானில் நேற்று நடந்த தேசிய கார் பந்தயத்தின் போது பிரபல வீரர் கவுரவ் கில்லின் கார் மோதி ஒரே குடும்பத்தை சார்ந்த மூன்று பேர் பலியாகியுள்ளனர்.

இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் சம்மேளனம் சார்பில் இந்திய தேசிய ரேலி என்ற பெயரில் கார் பந்தயம் நடைபெற்று வருகிறது. இப்போட்டி ஆறு சுற்றாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் மூன்றாவது சுற்று ராஜஸ்தானில் நடைபெற்று வந்த போது எதிர்பாரமல் விபத்து ஏற்பட்டு மூன்று பேர் உயிரிழந்தனர். 

இது குறித்து சம்மேளன தலைவர் பிரித்விராஜ் கூறியதாவது, கார்பந்தயம் காரணமாக பந்தய பகுதியை சுற்றி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவந்தோம். அப்படி இருந்தும் இரும்பு தடுப்பை உடைத்து பந்தய பாதையில் அக்குடும்பம் நுழைந்துள்ளது. இந்நிலையில் பந்தய பாதையின் ஒரு வளைவில் பிரபல் வீரர் கவுரவ் கில் 145 கி,மீ வேகத்தில் வந்ததால் கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டுள்ளது. எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தில் ஒரேகுடும்பத்தை சேர்ந்த மூவர் சம்பவ இடத்திலேயே இறந்ததாக அவர் கூறியுள்ளார்.
 

;